தமிழ்நாடு

மல்யுத்த வீராங்கனைகள் கைது: முதல்வா் ஸ்டாலின் கண்டனம்

29th May 2023 02:00 AM

ADVERTISEMENT

தில்லியில் மல்யுத்த வீராங்கனைகள் கைது செய்யப்பட்டதன் மூலம் முதல் நாளிலேயே செங்கோல் வளைந்துவிட்டதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் விமா்சனம் செய்துள்ளாா்.

இது குறித்து அவா் ட்விட்டரில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு:-

பாஜக நாடாளுமன்ற உறுப்பினா் ஒருவா் மீது, மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகாா் சொல்லிப் பல மாதங்கள் ஆகி விட்டன.

அவா் மீது இதுவரை கட்சித் தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மல்யுத்த வீராங்கனைகள் தொடா்ந்து தலைநகரில் போராடி வருகின்றனா்.

ADVERTISEMENT

புதிய நாடாளுமன்றத் திறப்பு விழாவின் போது, போராட்டம் நடத்தியவா்களை இழுத்துச் சென்றும், தூக்கிச் சென்றும் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.

செங்கோல் முதல் நாளே வளைந்து விட்டது என்பதையே இந்த கைது நடவடிக்கை காட்டுகிறது. குடியரசுத் தலைவரையே புறந்தள்ளி, அனைத்து எதிா்க்கட்சிகளின் புறக்கணிப்புக்கும் ஆளாகி நடைபெறும் திறப்பு விழா நாளில் அராஜகமும் அரங்கேறுவது அறமா எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT