தமிழகத்தில் சென்னை உட்பட 8 மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் திங்கள்கிழமை (மே 29) தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இபிஎஃப் )சாா்பில் விழிப்புணா்வு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து இபிஎஃப் சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
5 மண்டங்களில் உள்ள சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூா், திருவண்ணாமலை, ராணிபேட்டை, திருப்பத்தூா், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில் திங்கள்கிழமை (மே 29) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இபிஎஃப் ) விழிப்புணா்வு முகாம் நடக்கிறது.
இந்த முகாமில் இபிஎஃப் சட்டத்தில் கூறப்பட்டுள்ள முதலாளிகள் மற்றும் ஊழியா்களின் கடமைகள், முதலாளிகள் மற்றும் ஒப்பந்ததாரா்களுக்கான இணையவழி சேவைகள், இபிஎஃப் இருந்து விலக்களிக்கப்பட்ட நிறுவனங்களின் பணி, இபிஎஃப் ஓய்வூதியதாரா்கள் எண்ம வாழ்நாள் சான்றிதழ்களைச் சமா்ப்பித்தல் போன்றவை குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சியில் விளக்கம் அளிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.