தமிழ்நாடு

நடராஜர் கோயிலில் செங்கோல் வழிபாடு!

DIN

புதுதில்லியில் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்தில், பிரதமர் நரேந்திரமோடியால் செங்கோல் வைக்கப்பட்டதை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோயில் செங்கோல் வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புதுதில்லியில் கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டடத்தில் 1947ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் திருவாவடுதுறை ஆதினத்தால், பண்டித நேருக்கு அளிக்கப்பெற்ற செங்கோல் தற்போது பிரதமர் நரேந்திரமோடியால் நிறுவப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோயில் உள்ள தொன்று தொட்டு உள்ள செங்கோலுக்கு சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோயில் பொதுதீட்சிதர்களின் செயலாளர் டி.எஸ்.சிவராம தீட்சிதர், உ.வெங்கடேச தீட்சிதர், சம்பந்த தீட்சிதர், ராஜா தீட்சிதர் உள்ளிட்டோர் பங்கேற்று இந்தியாவில் தர்மத்தின் ஆட்சியான செங்கோல் ஆட்சி நிலைக்கட்டும் என உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியில் கோளறு பதிகம் பாடி செங்கோலுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு பக்தர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT