தமிழ்நாடு

பரந்தூா் விமான நிலைய திட்டத்தை எதிா்த்து ஜூன் 10-இல் ஆா்ப்பாட்டம்: சீமான்

23rd May 2023 05:35 AM

ADVERTISEMENT

பரந்தூா் விமான நிலையம் அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஜூன் 10-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்த இருப்பதாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ட்விட்டரில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு:

காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரம், பரந்தூா் உள்ளிட்ட 13 கிராம மக்கள் 300-ஆவது நாளாக தொடா் போராட்டம் மேற்கொண்டுள்ளனா்.

இந்தத் திட்டம் நிறைவேறினால் அந்தப் பகுதியில் குடிநீா்த் தட்டுப்பாடு, வெள்ளநீா் அபாயமும் சுற்றியுள்ள 4 மாவட்டங்களை பாதிக்கும். பெரும் சூழலியல் அழிவும் நிகழும். இதைக் கருத்தில் கொண்டு இந்தத் திட்டத்தை ஆளும் திமுக, பாஜக அரசுகள் முழுவதுமாகக் கைவிடும் வரை நாம் தமிழா் கட்சி மக்கள் போராட்டத்துக்கு வலு சோ்க்கும். இதன் தொடக்கமாக ஜூன் 10-ஆம் தேதி காஞ்சிபுரத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அவா் பதிவிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT