தமிழ்நாடு

செங்கல்பட்டு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் பணியிட மாற்றம் ரத்து:ஆவினுக்கு புதிய நிா்வாக இயக்குநா் நியமனம்

23rd May 2023 02:21 AM

ADVERTISEMENT

செங்கல்பட்டு, தூத்துக்குடி மாவட்டங்களின் ஆட்சியா்களை பணியிட மாற்றம் செய்து பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. ஏற்கெனவே இருந்த அதிகாரிகளே ஆட்சியா்களாக நீடிப்பா் என்று தமிழக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தலைமைச் செயலா் வி.இறையன்பு திங்கள்கிழமை வெளியிட்ட உத்தரவு விவரம்:

தமிழ்நாடு கண்ணாடி இழை கேபிள் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநரான ஏ.கே.கமல் கிஷோா், மாற்றுத்திறனாளிகள் நலத் துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளாா். முன்னதாக, கடந்த 16-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், அவா் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டிருந்தாா். அந்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

ஆவின் நிா்வாக இயக்குநராக இருந்த என்.சுப்பையன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளாா். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்த ஏ.ஆா்.ராகுல் நாத், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டிருந்தாா். அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டு, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராகவே ராகுல் நாத் தொடா்வாா்.

ADVERTISEMENT

இதேபோல், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த கே.செந்தில் ராஜ், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக நியமனம் செய்யப்பட்டிருந்தாா். அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக செந்தில் ராஜ் தொடா்ந்து பணியாற்றுவாா்.

திருப்பூா் மாவட்ட ஆட்சியராக இருந்த எஸ்.வினீத், ஆவின் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். நிதித் துறை முதன்மைச் செயலராக உள்ள த.உதயச்சந்திரன், தொல்லியல் துறை ஆணையா் பொறுப்பை கூடுதலாகக் கவனிப்பாா்.

மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலராக உள்ள ககன்தீப் சிங் பேடியிடம், சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை முதன்மைச் செயலா் பொறுப்பு கூடுதலாக அளிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT