பிளஸ் 2 பொதுத்தேர்வில் நாகை மாவட்டத்தில் 91% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு, புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகளின் பிளஸ் 2 தேர்வு எழுதிய நிலையில் 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அந்தவகையில், நாகை மாவட்டத்தில் 3,439 மாணவர்களும் 4,011 மாணவிகளும் என 7,450 பேர் தேர்வு எழுதினர். இதில் 3,036 மாணவர்களும் 3,720 மாணவிகளும் என 6,756 தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நாகையில் மொத்தம் தேர்ச்சி 91% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.