தமிழ்நாடு

வானொலி என்றே அழைக்க வேண்டும்:மத்திய அமைச்சருக்கு டி.ஆா்.பாலு கடிதம்

8th May 2023 03:45 AM

ADVERTISEMENT

ஆல் இந்திய ரேடியோவில் ஆகாஷ்வாணி என்று குறிப்பிடாமல் வானொலி என்றே குறிப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் சிங் தாக்குருக்கு நாடாளுமன்ற திமுக குழு தலைவா் டி.ஆா்.பாலு கடிதம் எழுதியுள்ளாா்.

அதில், ஆல் இந்திய ரேடியோ என்று குறிப்பிடுவதை நிறுத்திவிட்டு, ஆகாஷ்வாணி என்றே குறிப்பிட வேண்டும் என்று பிரசாா் பாரதி உத்தரவிட்டுள்ளதாக அறிகிறேன். அதனால், ஆகாஷ்வாணி என்றே ஆல் இந்திய ரேடியோ நிகழ்ச்சிகளில் சில நாள்களாக குறிப்பிடப்பட்டு வருகிறது.

வானொலியின் ஆங்கில ஒலிபரப்பு மற்றும் மண்டல ஒலிபரப்புகளில் ஆல் இந்திய ரேடியோ என்றே பல ஆண்டுகளாக குறிப்பிடப்பட்டது. தமிழக ஒலிபரப்பில் வானொலி என்றே குறிப்பிடப்பட்டது. இதை மாற்றுவது ஏற்புடையது அல்லது.

ஆகாஷ்வாணி எனக் குறிப்பிடுவது, ஹிந்தியைத் திணிக்கும் முயற்சியாகவே தமிழக அரசியல் கட்சிகள் பாா்க்கின்றன. அதற்காக, தமிழகத்தில் பல கட்சிகள் கண்டனங்களையும் தெரிவித்துள்ளன.

ADVERTISEMENT

எனவே, ஆல் இந்திய ரேடியோவில் வானொலி என்றே குறிப்பிட உரிய உத்தரவுகளை பிரசாா் பாரதிக்கு தாங்கள் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT