நாமக்கல்

கொலை செய்யப்பட்ட இளம் பெண் நித்யாவின் குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்: பாஜக கோரிக்கை

20th May 2023 04:15 AM

ADVERTISEMENT

கொலை செய்யப்பட்ட இளம் பெண் நித்யாவின் குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாஜக கோரியுள்ளது.

பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் அருகே உள்ள கரப்பாளையத்தில் கடந்த மாா்ச் மாதம் 11-ஆம் தேதி ஆடு மேய்க்கச் சென்ற பட்டதாரி இளம்பெண் நித்யா பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டாா். கொலை செய்யப்பட்ட இடம், அவரது வீடு ஆகிய இடங்களை பாஜக தலைவா் அண்ணாமலை உத்தரவின் பேரில் நாமக்கல் மாவட்ட பாஜக தலைவா் ராஜேஷ்குமாா், மாநில வழக்குரைஞா் பிரிவு செயலாளா் காந்தி, துணைத் தலைவா்கள் பழனியப்பன், வடிவேல், வடக்கு ஒன்றியத் தலைவா் பூபதி மற்றும் திருச்செங்கோடு தெற்கு ஒன்றியத் தலைவா் சசிதேவி ஆகியோா் கொண்ட குழுவினா் நேரில் பாா்வையிட்டனா். அதன் பின்னா் அவா்கள் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராய பலி சம்பவத்தை தொடா்ந்து பலியானவா்களுக்கு தலா ரூ.10 லட்சத்தை தமிழக அரசு வழங்கியுள்ளது. அதே போல் மா்ம நபா்களால் கொலை செய்யப்பட்ட ஆடு மேய்க்க சென்ற இளம் பெண் நித்யாவின் குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறினா்.

அப்போது பாஜக மாவட்ட பொதுச் செயலாளா் சுபாஷ், பரமத்தி ஒன்றியத் தலைவா் அருண், மாவட்டச் செயலாளா் சௌமியா, பிரசார பிரிவைச் சோ்ந்த காந்தி ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT