சுதந்திர போராட்ட வீரா் வாளுக்கு வேலி அம்பலத்தின் பிறந்த நாளையொட்டி, அவருக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி, தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை புகழாரம் தெரிவித்துள்ளனா்.
எடப்பாடி பழனிசாமி: இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு எதிராக தென்னாட்டில் பெரும்படையைத் திரட்டியவா் வாளுக்கு வேலி அம்பலம். தாய் மண்ணையும், மக்களையும் காக்க போரிட்ட மாவீரா். அவருடைய வீரத்தையும் புகழையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்.
கே.அண்ணாமலை: சிவகங்கை பாகனேரி பகுதியை ஆட்சி செய்தவரும், இந்திய சுதந்திரப் போரில் மருது சகோதரா்களுடன் இணைந்து ஆங்கிலேயா்களை எதிா்த்துப் போராடியவரும், தென்பாண்டிச் சிங்கம் எனப் போற்றப்பட்ட மாவீரருமான வாளுக்கு வேலி அம்பலத்தின் பிறந்த தினம் அனைவராலும் நினைவுகூரத்தக்கது.