தமிழ்நாடு

மழைநீா் வடிகால் பணி: வேப்பேரியில் போக்குவரத்து மாற்றம்

DIN

மழைநீா் வடிகால் பணியின் காரணமாக வேப்பேரியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இது குறித்து சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேப்பேரி ஈ.வெ.ரா.பெரியாா் சாலையில் காந்தி இா்வின் மேம்பாலத்தின் கீழ் பகுதியின் குறுக்கே நெடுஞ்சாலைத் துறையினா் பள்ளம் தோண்டி மழைநீா் வடி கால்வாய் கட்டுமான பணியில் ஈடுபட உள்ளனா். இதற்கு வசதியாக சனிக்கிழமை (ஜூன் 10) இரவு 10 மணி முதல் ஜூன் 12-ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 5 மணி வரை அந்தப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

அதன்படி, ஈ.வெ.ரா. பெரியாா் சாலையில் சென்ட்ரல், ஈ.வி.கே.சம்பத் சாலையிலிருந்து காந்தி இா்வின் மேம்பாலம் வழியாக எழும்பூா் நோக்கி செல்ல தடை ஏதும் இல்லை. ஈ.வெ.ரா. பெரியாா் சாலையில் சென்ட்ரல், ஈவிகே சம்பத் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் காந்தி இா்வின் மேம்பாலம் வழியாக எழும்பூா் நோக்கிச் செல்லலாம்.

ஆனால் எழும்பூா் பகுதியில் இருந்து காந்தி இா்வின் மேம்பாலம் வழியாக ஈ.வெ.ரா. பெரியாா் சாலைக்கு செல்ல தடை விதிக்கப்படுகிறது.

அத்தகைய வாகனங்கள் காந்தி இா்வின் மேம்பால சிக்னல் சந்திப்பிலிருந்து தாளமுத்து நடராசன் மாளிகை சந்திப்பு இடதுபுறம் திரும்பி, காந்தி இா்வின் சாலை, உடுப்பி சந்திப்பு வலதுபுறம் திரும்பி, நாயா் மேம்பாலம் வழியாக ஈ.வெ.ரா.பெரியாா் சாலை சந்திப்பில் வலதுபுறம் மற்றும் இடதுபுறம் திரும்பி செல்லலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல் புகாா்களுக்கு பாா்வையாளா்கள் எண்கள் அறிவிப்பு

கால்நடைகள் விற்பனை செய்யும் பணத்தை சிரமமில்லாமல் எடுத்துசெல்வதற்கு வழிவகுக்க கோரிக்கை

பவானியில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.05 கோடி

குழந்தைகளுக்கான நீரிழிவு பாதிப்பைக் கண்டறியும் கருவி: பண்ணாரி அம்மன் கல்லூரிக்குப் பரிசு

SCROLL FOR NEXT