தமிழ்நாடு

சுகாதாரமற்ற குடிநீர்: ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து சாலைமறியல்!

DIN

மேட்டுப்பாளையம் அருகே பெள்ளேபாளையம் ஊராட்சியில் குடிநீரில் உப்பு நீர் கலந்து பொதுமக்களுக்கு வழங்குவதை கண்டித்து சிறுமுகை -அன்னூர் சாலையில்   பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். 

மறியலில் ஈடுபட்ட மக்களை காவல் ஆய்வாளர் தாக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பெள்ளேபாளையம் ஊராட்சியில் குடிநீரில் உப்பு நீர் கலந்து வருவதாக குற்றம்சாட்டியும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரியும் சிறுமுகை-அன்னூர் சாலையில் வெள்ளி குப்பம் பளையம் கிராமத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குடிநீரில் உப்பு நீர் அதிகமாக வருவதால் அதனை பொதுமக்கள் குடிக்க முடியாத நிலை ஏற்படுவதாகவும், எனவே, இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்க பட்டது.

இதனையடுத்து சிறுமுகை போலீசார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

கூத்தாமன்டி பகுதியில் இருந்து தண்ணீர் எடுக்கும் இடத்தில் ஓடை நீர் அதிக அளவில் பவானி ஆற்றில் கலப்பதால் இந்த பிரச்னை உள்ளதாக ஊராட்சி தலைவர் பேசி கொண்டு இருந்தார்.

அப்போது அங்க கூட்டத்தை கலைக்க வந்த அன்னூர் காவல் ஆய்வாளர் நித்யா திடீரென மறியலில்  ஈடுபட்டவர்களை கலைந்து செல்ல கூறி அங்கு கூடியிருந்த வரிகளை தாக்க முயன்றதால் பதற்றம் நிலவியது.


  
மறியலில் ஈடுபட்ட பெண்கள் காவல் ஆய்வாளர் நித்யாவை தாக்கம் முயற்சித்ததால் தொடர்ந்து பதற்றம் நிலவியது. இதனையடுத்து அங்கு கூடியிருந்த சில அரசியல் பிரமுகர்கள் ஆய்வாளரை சமாதானம் செய்து அனுப்பி வைத்து விட்டு பின்னர் ஊராட்சி மன்ற அலுவலகம் வர சொல்லி பொது மக்களிடம் பேசிய  ஊராட்சி தலைவர், இதற்கு உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT