திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அருள்புரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக நம்ம நல்லாறு திட்டம் நிறைவேற்ற வலியுறுத்தி நடைப்பயணத்தை நடைபெற்றது.
பல்லடம் அருள்புரத்தில் இருந்து உடுமலைப்பேட்டை வரையிலான இந்த நடைப்பயணத்தை கோவை எம்.பி. நடராஜன் தொடங்கி வைத்தார்.
இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் டில்லி பாபு, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி திருப்பூர் மாவட்ட செயலாளர் முத்து கண்ணன், திருப்பூர் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் மது சூதனன், பல்லடம் ஒன்றிய தலைவர் பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.