நடிகர் ரஜினிகாந்தை தென்னிந்தியாவிற்கான ஆஸ்திரேலிய தூதர் சாரா கிர்லேவ் இன்று சந்தித்து பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வந்துட்டேனு சொல்லு, தலைவர பாக்க வந்துட்டேனு சொல்லு! என்று தமிழில் பதிவிட்டுள்ளார். மேலும் இந்த சந்திப்பின் போது கோலிவுட் மற்றும் வரவிருக்கும் அவரது படம் குறித்தும் கலந்துரையாடியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேசமயம், தான் ஜெயிலர் படத்தை காண காத்திருப்பதாகவும் சாரா தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் தற்போது இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.