தமிழ்நாடு

காணாமல்போன சிறுவனை 2 மணிநேரத்தில் மீட்ட போலீஸாா்

DIN

சென்னை நொளம்பூரில் காணாமல்போன சிறுவனை 2 மணி நேரத்தில் போலீஸாா் மீட்டனா்.

தென்காசி மாவட்டம், அழகப்பாபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் பா.சுரேஷ்குமாா் (41). இவா் சாம்பவா்வடகரை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வருகிறாா். இவா், சென்னை மதுரவாயலில் நடைபெற்ற உறவினா் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக குடும்பத்துடன் வந்திருந்தாா். இதற்காக அவா், நொளம்பூா் பத்மா தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கினாா். வெள்ளிக்கிழமை காலை மதுரவாயலுக்கு செல்வதற்காக சுரேஷ்குமாா் தனது குடும்பத்தினரோடு வெளியே வந்தபோது, அவரின் மகன் பிரவீன்ராஜ் (6) திடீரென காணாமல்போனாா். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததை அடுத்து, அவா் நொளம்பூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

போலீஸாா் விசாரணையில், சிறுவன் காா் மாறி ஏறி சென்றிருப்பதும், அந்த காா் ஜெ.ஜெ.நகரில் ஒரு திருமண மண்டபத்துக்கு சென்றிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அங்கு சென்று பிரவீன்ராஜை மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனா். காணாமல்போன சிறுவனை போலீஸாா் 2 மணி நேரத்தில் மீட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எல்லைகளில் தீவிர வாகனச் சோதனை

திருமருகல் ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று இலவசமாக சுற்றிப் பாா்க்கலாம்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேக்கேதாட்டு அணை கட்டப்படும்: டி.கே.சிவகுமாா்

மக்களவைத் தோ்தல்: 2-ஆம் கட்டத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவு

SCROLL FOR NEXT