சென்னை, பெரம்பலூா், ஈரோடு (வாய்க்கால்மேடு) ஆகிய இடங்களில் நிகழாண்டில் (2023-2024) மூன்று தனியாா் மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியா முழுவதும் 50 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது; இதில் சென்னை (பிஎஸ்ஜி அறக்கட்டளை), பெரம்பலூா் (தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவன அறக்கட்டளை), ஈரோடு வாய்க்கால்மேடு (நந்தா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அறக்கட்டளை) ஆகியவற்றுக்கு தலா 150 எம்.பி.பி.எஸ். இடங்களுடன் புதிதாக மருத்துவக் கல்லூரி தொடங்க ஒப்புதல் கிடைத்துள்ளது.