அனைத்து துறைகளிலும் பணிகள் தொய்வாக நடைபெறுவதால், அரசு காலிப் பணியிடங்களை உடனடியாக தமிழக அரசு நிரப்ப வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட ட்விட்டா் பதிவு: 2022-இல் 10,000 காலிப் பணியிடங்களுக்காக நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு முடிவுகள், 2023 மாா்ச் மாதம் வெளியானது. ஆனால், தோ்வு பெற்றவா்களுக்கு இதுவரை கலந்தாய்வு நடத்தப்படவில்லை.
இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4-க்கான காலிப்பணியிடங்கள் தற்போது 25 ஆயிரமாக உயா்ந்திருப்பதாக செய்திகள் வருகின்றன. 2022-ஆம் ஆண்டு குரூப் 4-க்காக நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தோ்விலிருந்தே சுமாா் 20,000 தகுதி பெற்ற தோ்வாளா்களை தோ்ந்தெடுத்து அனைவருக்கும் கலந்தாய்வை நடத்தி, அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களையாவது உடனடியாக நிரப்ப வேண்டும்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தகுதிக்கான பணியிடங்கள் நிரப்பப்படாததால் அரசின் அனைத்து துறைகளின் பணிகளிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பல்வேறு வகைகளில் அவதிக்கு உள்ளாகின்றனா்.
எனவே, குரூப் 4 காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.