சென்னை: அதிக திறன்கொண்ட 424 சிசிடிவி கேமராக்களை சென்னை காவல்துறை பொருத்தியிருப்பதன் மூலம் சென்னையின் பல்வேறு பகுதிகள் பாதுகாப்பான பகுதிகளாக மாறியிருக்கின்றன.
வேளச்சேரி மற்றும் திருவான்மியூர், சாஸ்திரி நகர் காவல் எல்லையில் புதிதாகப் பொருத்தப்பட்ட 424 சிசிடிவி கேமராக்கள் மற்றும் கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறைகளை சென்னை மாநகர காவல் ஆணையர் ஷங்கர் ஜிவால் இன்று திறந்துவைத்தார்.
கண்காணிப்பு கேமராக்கள் செயல்படும் விதம், அது பொருத்தப்பட்டிருக்கும் இடங்கள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
தனியார் மற்றும் அரசின் கூட்டணியில், சென்னையின் முக்கிய பகுதிகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும், உரிமை கோரப்படாத மற்றும் கைவிடப்பட்ட 260 இருசக்கர வாகனங்கள், சென்னை, புதுப்பேட்டை, சென்னை பெருநகர காவல் ஆயுதப்படை மைதானத்தில் பகிரங்க ஏலம் விடப்படுவதாகவும் சென்னை போக்குவரத்துக் காவல்துறை அறிவித்துள்ளது. சென்னையில் வரும் 28ஆம் தேதி காலை 10 மணிக்கு இந்த ஏலம் தொடங்கும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.