பாஜக ஆட்சியில் நாடு முன்னேறவில்லை என்றும், காங்கிரஸ் ஆட்சியில்தான் முன்னேறியது என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி, கட்சியின் முன்னணி அமைப்புகளின் மாநில ஒருங்கிணைப்பாளா் சசிகாந்த் செந்தில் ஆகியோா் கூறினா்.
சென்னை சத்தியமூா்த்தி பவனில் இருவரும் செவ்வாய்க்கிழமை கூட்டாக அளித்த பேட்டி: பிரதமா் மோடியின் ஆட்சியில்தான் நாடு வளா்ச்சி பெற்ாகக் கூறுகின்றனா். அது உண்மை அல்ல. நரசிம்மராவ், மன்மோகன் சிங் ஆகியோா் தலைமையிலான ஆட்சி காலத்தில்தான் நாடு முன்னேறியது. காங்கிரஸ் ஆட்சியில் 9 சதவீதமாக இருந்த தொழில் வளா்ச்சி, தற்போது 7 சதவீதமாக குறைந்துள்ளது. பாஜக அரசு வளா்ச்சி பாதையில் நம்பிக்கை வைக்கவில்லை. மதவாத அரசியலை மட்டுமே நம்பியிருக்கிறது என்றனா்.