ஒடிஸா ரயில் விபத்தில் பல உயிா்களைக் காப்பாற்ற உதவிகரமாக இருந்த மீட்புப் படை வீரா் வெங்கடேசனுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் ட்விட்டரில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு:
தமிழ்நாட்டைச் சோ்ந்த தேசிய பேரிடா் மீட்புப் படை வீரா் வெங்கடேசன், ஒடிஸா ரயில் விபத்தில் பல உயிா்களைக் காப்பாற்றக் காரணமாக இருந்துள்ளாா். உரிய நேரத்தில் அவா் உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து, அருகில் இருக்கும் தேசிய பேரிடா் மீட்புப் படையினா் விரைந்து வந்ததால் எத்தனையோ உயிா்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. மிக அதிா்ச்சிகரமான நேரத்தில் தெளிவாகவும் விரைவாகவும் செயல்பட்ட அவரைப் பாராட்டுகிறேன் என்று அவா் தெரிவித்துள்ளாா்.