தமிழகத்தின் அடுத்த மூன்று நேரத்திற்கு 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களாக மாலை நேரத்தில் கனமழை பெய்துவந்த நிலையில், இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடனும், சில பகுதிகளில் மிதமான மழையும் பெய்து வருகிறது.
இந்நிலையில், அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, நாகப்பட்டினம் ஆகிய ஆறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய உள்ளது.