தமிழ்நாடு

இது தேவையா? முதல்வர் என்னைத் திட்டுவார்: நகைச்சுவையாக பதிலளித்த கே.என். நேரு

DIN

இது தேவையா? முதல்வர் என்னை கூப்பிட்டு திட்டுவார் என திருச்சியில் ஆளுநர் பற்றிய கேள்விக்கு நகைச்சுவையாக பதிலளித்தார் அமைச்சர் கேன் நேரு.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.1 கோடியே 8 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,  பள்ளிக் கல்வித்துறைஅமைச்சர்  அன்பில் மகேஷ் பொய்யமொழி ஆகியோர் ரூபாய் 50,10,000 மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்திய வாகனங்களை 60 பயனாளிகளுக்கு வழங்கினார்கள்.

இதே போல் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் சார்பில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பேரூராட்சிகளுக்கும் ரூபாய் 47 லட்சத்து 19,000 செலவில் குப்பை அள்ளும் வாகனங்களையும் அமைச்சர்கள் வழங்கினார்கள்.

மேலும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் திருச்சி மாவட்டம், மணச்சநல்லூர் அடுத்துள்ள பாளையூர் கிராமத்தைச் சேர்ந்த தங்கம்மாள் என்பவர்  பாம்பு கடித்து இறந்தார். அவருக்கு தமிழக அரசு சார்பில் குடும்பத்திற்கு நிவாரண நிதியாக ரூபாய் 1லட்சத்தை அமைச்சர்கள் வழங்கினார்.

மேலும், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் தோறும்  மனுக்கள் வழங்க வரும் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் பயன்பெறும் வகையில் ருபாய் 4லட்சம் 79 ஆயிரம் மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் வாகனத்தையும் அமைச்சர்கள் பயன்பாட்டிற்கு அர்பணித்தனர். மேலும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல துறை சார்பில் திருச்சி மாவட்ட கிறிஸ்துவ மகளிர் உதவி சங்கத்திற்கு  ரூ 5,25,000 நலத்திட்டங்களை வழங்கினார்.

மொத்தமாக  ஒரு கோடியே 8 லட்சத்து 33ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நலத்திட்டங்களை அமைச்சர்கள் வழங்கினார்கள்.

இதை தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டியளித்த நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, நாளை மறுநாள் தஞ்சை மாவட்டத்தில் டெல்டா பகுதியில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை தமிழக முதல்வர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்கிறார்.  இதனை தொடர்ந்து பூலையாறு, புள்ளம்பாடி பகுதியில் உள்ள நந்தியாறு ஆகியவற்றை பார்வையிட்டு பின்னர் திருச்சிக்கு வருகிறார். தொடர்ந்து  விமான மூலமாக  சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார் என்றார்.

அப்போது, தமிழக ஆளுநர் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, நல்ல விஷயம் நடந்து கொண்டிருக்கும் பொழுது இது தேவையா? முதல்வர் என்னைக் கூப்பிட்டுத் திட்டுவார் என நகைச்சுவையாக பேசிவிட்டு கடந்து சென்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு: வாக்காளா்கள் அதிருப்தி

மளிகைக் கடையில் பொருள்கள் திருட்டு

வாக்குச்சாவடி மையம் கேட்டு வாக்களிக்க மறுத்த கிராம மக்கள்

SCROLL FOR NEXT