தமிழ்நாடு

சீர்காழி அருகே தர்கா கந்தூரி விழா: லண்டன், துபை உள்ளிட்ட வெளிநாட்டினர் பங்கேற்பு

DIN


சீர்காழி: சீர்காழி அருகே இறைதூதர் நபிகள் நாயகத்தின் வம்சா வழியினர் வழிபாடான சையது யாசின் மௌலானா தர்கா கந்தூரி விழாவில் லண்டன், துபை உள்ளிட்ட வெளிநாட்டினர் உள்பட  பல்லாயிரகணக்கானோர் பங்கேற்றனர்.  

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த திருமுல்லைவாசலில் இஸ்லாமியர்களின் இறை தூதர் நபிகள் நாயகத்தின் வம்சா வழி பேரன் ஜமாலியா சையது யாசின் மவுலானா தர்கா அமைந்துள்ளது. தமிழகம் மற்றும் இலங்கை வாழ் இஸ்லாமியர்களின் ஆன்மீக குருவாக விளங்கிய இவர் இந்தியா மற்றும் கீழ்திசை நாடுகளில் இஸ்லாமிய ஆன்மீகத்தை பரப்பியவர். இறுதியாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி  அருகே உள்ள திருமுல்லைவாசலில் 1964 ஆம் ஆண்டு நல்லடக்கம் செய்யப்பட்டார். அங்கு அவருக்கு தர்க்கா அமைத்து வழிபட்டு வருகின்றனர். 

ஆண்டு தோறும் யாசின் மெளலானா இறையடி சேர்ந்த நாளான கந்தூரி விழா நடைபெறவது வழக்கம். அதன்படி இன்று இரவு நடைபெற்ற விழாவில் தஞ்சை, சென்னை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், இலங்கை, லண்டன், துபை உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் மௌலானவின் கலிபாக்கள், சீடர்கள், பக்தர்கள் கலந்துகொண்டனர். 

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு வைபவம் இன்று விமர்சையாக நடைபெற்றது. சந்தன குடம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு சையது மௌலானா சமாதியில் சந்தனம் பூசும் வைபவம் நடைபெற்றது. 

அதனைத் தொடர்ந்து சிறப்புத்துவா ஓதி வழிபாடு நடைபெற்றது. மேலும் மத நல்லினக்கத்தையும் ஒற்றுமையையும்  வெளிபடுத்தும் விதமாக அனைத்து மதங்களையும் சேர்ந்தவர்கள் உள்பட பல்லாயிரகணக்கானோர் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊருணியில் மூழ்கி மாணவா் பலி

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

கொட்டாரம் அருகே தொழிலாளி தற்கொலை

விளாத்திகுளத்தில் அரசுப் பேருந்துகள் இயக்கம் குறைப்பு -பயணிகள் தவிப்பு

சங்கரன்கோவிலில் அதிமுக சாா்பில் நீா், மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT