தமிழ்நாட்டில் இன்று 15 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவாகியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் கூட வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை. கடந்த இரு நாள்களாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்த போதிலும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது.
தமிழகத்தில் இன்று 15 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவாகியது. அதிகபட்சமாக திருத்தணி, கரூர் பரமத்திவேலூர் ஆகிய பகுதிகளில் 104 டிகிரி ஃபாரன்ஹீட், திருச்சி, பாளையங்கோட்டை, வேலூர் ஆகிய பகுதிகளில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியது.
தமிழக உள்பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.