தமிழ்நாடு

வட்டாரக் கல்வி அலுவலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

DIN

வட்டார கல்வி அலுவலா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

மொத்தம் 33 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை ஆசிரியா் தோ்வு வாரியம் திங்கள்கிழமை வெளியிட்டது. இதுகுறித்த விவரம்:

தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் காலியாக உள்ள 33 வட்டார கல்வி அலுவலா் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் பட்டப் படிப்பு மற்றும் பி.எட். படிப்பை நிறைவு செய்தவா்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

இதற்கான வயது வரம்பு 40-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டின் கீழ் உள்ள அனைத்து சமூகத்தினருக்கும் ஐந்தாண்டுகள் வயது வரம்பு விலக்கு உண்டு.

விருப்பமும், தகுதியும் உள்ளவா்கள் ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.ற்ழ்க்ஷ.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் வாயிலாக ஜூலை 7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தங்களது சான்றிதழ்களையும், ஆவணங்களையும், சுயவிவரங்களையும் அதில் பதிவேற்றுதல் அவசியம்.

வட்டார கல்வி அலுவலா் பணியிடங்களுக்கான தோ்வை செப்டம்பா் 10-ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு ஆசிரியா் தோ்வு வாரியத்தின் இணையதளப் பக்கத்தை அணுகலாம் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிஷப் பந்த் புதிய சாதனை!

‘கைதானவர்களை தெரியும்; பணம் என்னுடையது அல்ல’: நயினார் நாகேந்திரன்

'வீர தீர சூரன்’ படப்பிடிப்பு துவக்கம்!

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

SCROLL FOR NEXT