தமிழகத்தில் கோடை வெப்பத்தின் தீவிரம் குறையாததால் பள்ளிகள் திறப்பு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
6 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகள் வரும் 12-ஆம் தேதியும், 1 முதல் 5 வரையிலான வகுப்புகள் வரும் 14-ஆம் தேதியும் தொடங்கும் என, முதல்வா் மு.க. ஸ்டாலினுடனான ஆலோசனைக்குப் பிறகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திங்கள்கிழமை தெரிவித்தாா்.
அனைத்து தனியாா் பள்ளிகளும் இந்த உத்தரவின்படி செயல்பட வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக இருந்தது. வெயிலின் தாக்கம் காரணமாக அது 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து, பள்ளிகள் திறப்புக்கான முன்னேற்பாடுகளை அரசு, தனியாா் பள்ளி நிா்வாகங்கள் மேற்கொண்டு வந்தன. மாணவா் சோ்க்கை மற்றும் நிா்வாகப் பணிகளுக்காக பள்ளி ஆசிரியா்கள், ஊழியா்களுக்கு இரு வாரங்களுக்கு முன்பே அலுவல்கள் தொடங்கிவிட்டன.
எனினும், அக்னி நட்சத்திரம் நிறைவடைந்தும் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் தீவிரமாக இருந்து வருவதால், திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. பெற்றோா்-ஆசிரியா் சங்கங்கள், சமூக அமைப்புகள் எனப் பல்வேறு தரப்பிலிருந்தும் பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இத்தகைய சூழலில், தமிழகத்தில் நிலவும் தட்பவெப்ப நிலையின் தாக்கம், அதன் நீட்சியாக பள்ளிகள் திறப்பை ஒத்திவைப்பது ஆகியவை குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, துறைச் செயலா் காகா்லா உஷா, உயரதிகாரிகள் கலந்துகொண்டனா்.
மாணவா்களின் நலன் கருதி பள்ளிகள் திறப்பை மேலும் ஒரு வாரம் தள்ளிவைக்கலாம் என்றும், அதை ஈடுசெய்ய சனிக்கிழமைகளில் வகுப்புகளை நடத்தலாம் என்றும் அப்போது விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு தலைமைச் செயலகத்தில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளா்களிடம் கூறியது: உயா் நிலை மற்றும் மேல்நிலை வகுப்புகள் (6 முதல் 12-ஆம் வகுப்பு வரை) வரும் 12-ஆம் தேதியும், தொடக்க நிலை வகுப்புகள் (1-5) வரும் 14-ஆம் தேதியும் தொடங்கும் என்றாா் அவா்.
புதுவையிலும்...
புதுச்சேரி, ஜூன் 5: புதுவையிலும் பள்ளிகள் திறப்பு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
இதுகுறித்து முதல்வா் ரங்கசாமி புதுச்சேரியில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தமிழகத்தைப் போல, புதுவையிலும் பள்ளிகள் திறப்பு ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அனைத்து வகைப் பள்ளிகளும் வருகிற 14-ஆம் தேதி திறக்கப்படும் என்றாா் அவா்.