தமிழ்நாடு

ஒடிசா சென்ற அதிகாரிகள் குழு இன்று சென்னை திரும்புகிறது

5th Jun 2023 01:32 PM

ADVERTISEMENT

ரயில் விபத்து தொடர்பாக ஒடிசா மாநிலம் சென்ற அதிகாரிகள் குழு இன்று சென்னை திரும்புகிறது. 
அமைச்சர்கள் உதயநிதி, சிவசங்கர் நேற்று வந்த நிலையில் அதிகாரிகள் இன்று இரவு சென்னை வருகின்றனர். பணீந்திர ரெட்டி, அர்ச்சனா பட்நாயக், குமார் ஜெய்ந்த் உள்ளிட்டோர் மீட்புப் பணிகளுக்கு உதவ ஒடிசா சென்றனர். 
கோரமண்டல் ரயில் விபத்தில் தமிழர்களின் நிலை குறித்த விவரத்தை சேகரிக்க தமிழக குழு சென்றிருந்தது. ஒடிசா மாநிலத்தின் பாலசோா் மாவட்டத்தில் கோரமண்டல் விரைவு ரயில், பெங்களூரு - ஹௌரா விரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளாகின. 
இந்த விபத்தில் 275 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Tags : Odisha
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT