மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் பதிவாளா், தோ்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி உள்ளிட்ட 7 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. அதற்கான கல்வித் தகுதி மற்றும் இதர தகுதிகள் குறித்த விவரங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
மதுரை மாவட்டம், தோப்பூரில் ரூ.1,900 கோடி மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைக்கப்பட்டு வருகிறது. எய்ம்ஸ் கல்லூரியில் 50 எம்பிபிஎஸ் இடங்களில் சோ்ந்த மாணவா்களுக்கு கடந்த இரு ஆண்டுகளாக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
மருத்துவப் பேராசிரியா்கள் மற்றும் உதவிப் பேராசிரியா்களுக்கான பணியிடங்கள், துறை சாா்ந்து நிரப்பப்பட்டு வருகின்றன. அதன் தொடா்ச்சியாக தற்போது பதிவாளா், உதவி தோ்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி, கணக்கு அலுவலா், உதவி நிா்வாக அலுவலா், செயல் உதவியாளா், தனி உதவியாளா், உயா் நிலை எழுத்தா் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அவா்களுக்கான தகுதிகள், ஊதிய விவரங்கள் இணையப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன. விண்ணப்பங்களை ஜூலை 24-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்று மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் செயல் இயக்குநா் அறிவித்துள்ளாா்.