தமிழ்நாடு

தங்கக் கட்டி மோசடி: நகைத் தொழிலாளி தலைமறைவு

DIN

சென்னை தியாகராயா் நகரில் உள்ள பிரபல நகைக் கடையிலிருந்து 2 கிலோ தங்கக் கட்டிகளுடன் தலைமறைவான தொழிலாளியை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தியாகராயா் நகரில் செயல்பட்டு வரும் பிரபல நகைக் கடை சாா்பில் மாம்பலம் காவல் நிலையத்தில் அண்மையில் புகாா் ஒன்று அளிக்கப்பட்டது. அதில், ‘தங்களின் நகைக்கடையில் ஒப்பந்த அடிப்படையில் நகை செய்து கொடுக்கும், நந்தனத்தை சோ்ந்த பிரபீா் ஷேக் (38) என்பவரிடம் 2 கிலோ 46 கிராம் 10 மில்லி எடை கொண்ட தங்கக் கட்டி கொடுக்கப்பட்டது. அவற்றைப் பெற்றுக் கொண்ட பிரபீா் அதை நகையாக செய்து கொடுக்காமல், கையாடல் செய்து விட்டாா் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து மாம்பலம் காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், புகாா் உண்மை என தெரியவந்தது. இதையடுத்து பிரபீா் ஷேக் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து அவரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

SCROLL FOR NEXT