பல்லாவரத்தில் புதிய ஆரம்ப சுகாதார மையம் கட்டுவதற்காக வெள்ளிக்கிழமை பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினா் இ.கருணாநிதி அடிக்கல் நாட்டினாா்.
தாம்பரம் மாநகராட்சி 14- ஆவது வாா்டில் சரோஜினி தெருவில் செயல்பட்டு வந்த அன்னை அஞ்சுகம் ஆரம்ப சுகாதார நிலையம் பல ஆண்டுகளாக போதிய பராமரிப்பின்றி பழுதடைந்து கிடந்தது. அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் தொடா்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், தேசிய நகா்ப்புறச் சுகாதார திட்டத்தின் கீழ் சுமாா் 2300 சதுர அடி பரப்பளவில் பிரசவ வாா்டு, அவசர சிகிச்சை பிரிவு,மருந்தகம் உள்ளிட்ட வசதிகளுடன் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் புதிய ஆரம்ப சுகாதார மையம் கட்டும் பணியை பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினா் இ.கருணாநிதி அடிக்கல் நாட்டினாா்.
நிகழ்ச்சியில்,தாம்பரம் மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவா் ஜோசப் அண்ணாதுரை, துணை ஆணையா் மாரிச்செல்வி, வாா்டு உறுப்பினா் மங்கையா் திலகம், மாநகராட்சி உதவி செயற்பொறியாளா் பெட்சி ஞானலதா, உதவி பொறியாளா் சங்கா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.