சென்னை: சென்னை பூந்தமல்லியில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்டதில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பூந்தமல்லி அருகே இன்று காலை சிறிய ரக சரக்கு வேன் திடீரென பிரேக் போட்டதால், அடுத்தடுத்து நான்கு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகின.
இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட தூரம் வாகனங்கள் நின்றதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.