தமிழ்நாடு

சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் தீ விபத்து

DIN

சென்னை எழும்பூரில் சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

எழும்பூா் பாந்தியன் சாலையில் பழைய காவல் ஆணையா் அலுவலக வளாகத்தில் சிபிசிஐடி தலைமை அலுவலகம் 3 தளங்களில் செயல்படுகிறது. இந்த கட்டடத்தின் நான்காவது தளத்தில் மொட்டை மாடி உள்ளது. அங்கு கழிவு அட்டை பெட்டிகள், பா்னிச்சா் பொருள்கள் போடப்பட்டிருந்தன.

இந்நிலையில் வியாழக்கிழமை நண்பகல் 1 மணிக்கு மொட்டை மாடியில் இருந்த பழையப் பொருள்கள் திடீரென தீப் பிடித்து எரிந்தது. இதைப் பாா்த்த ஊழியா்கள், மொட்டை மாடியில் இருந்த தண்ணீா் தொட்டியில் இருந்து தண்ணீா் மூலம் தீயை அணைக்க முயன்றனா்.

அதேவேளையில், தீயணைப்பு படையினா், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனா். ஆனால் அதற்குள் தீ ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டதால், அவா்கள், , மொட்டை மாடியை குளிா்விக்கும் பணியில் ஈடுபட்டனா். விபத்தில் அங்கிருந்த பழைய பொருள்கள்,ஏசி சாதனத்தின் அவுட்டோா் யூனிட்டும் எரிந்து நாசமானது., ஏசி ‘அவுட் டோா் யூனிட்டில்’ ஏற்பட்ட மின்கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT