தமிழ்நாடு

கோவையில் பரபரப்பு... காதல் மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவர், பெற்றோர் கைது!

DIN

கோவையில் காதல் மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவர் மற்றும் கொலைக்கு உடந்தையாக நாடகமாடிய பெண்ணின் மாமியார், மாமனார் என 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

கோவை மத்துவராயபுரம் பகுதியை சேர்ந்த சஞ்சய்(20) தனது கல்லூரியில் உடன் படித்த ரமணி (20) என்ற பெண்ணை காதலித்து கடந்த மாதம் 6 ஆம் தேதி திருமணம் செய்துக்கொண்டார். பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு இருந்ததால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து, சஞ்சய் வீட்டில், சஞ்சயின் தாய், தந்தையுடன் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், சஞ்சய் கல்லூரியில் உடன் படிக்கும் மற்றொரு பெண்ணிடம் அடிக்கடி செல்போனில் பேசியது தொடர்பாக மனைவி ரமணிக்கு கோபம் ஏற்பட்டு இருவருக்கும் இடையே வாக்குவாதம்  முற்றியதில், ரமணியை சஞ்சை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். 

கொலையை மறைப்பதற்காக தனது பெற்றோருக்கு போன் செய்ததையடுத்து, இருவரும்  வீட்டுக்கு வந்து இறந்து போன ரமணியின் உடலில் அணிந்திருந்த உடையை அகற்றி சமையலுக்கு பயன்படுத்தும் மஞ்சள் பொடியை கரைத்து உடல் முழுவதும் பூசி குளிக்கவைத்து துணிகளை மாற்றிவிட்டு சாணிப்பவுடர் குடித்தது போன்று மற்றவர்களை நம்பவைத்து, அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை கூவி அழைத்து புளியைக் கரைத்து ஊற்றியும்  பின்பு ஆலாந்துறை  தனியார் மருத்துவமனைக்கு ரமணி உடலை தூக்கிச் சென்றுள்ளனர்.

காதல் மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவர் சஞ்சய், அவரது பெற்றோர் லட்சுமணன்-பக்ருநிஷா

ரமணியின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் ரமணியின் உடலை பூலுவபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எடுத்துச் சென்றுள்ளனர். அங்கு அலுவலில் இருந்த பெண் மருத்துவர் ரமணி உடலை  பரிசோதித்து இறந்து விட்டதாக கூறியுள்ளார். 

மருத்துவமனையில் இருந்து காருண்யா நகர் காவல்  நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து  சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், மருத்துவமனையில் இருந்த ரமணியின் உடலை கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்மூலம் அனுப்பி  வைத்தனர். 

மேலும், இது தொடர்பாக போலீசார் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். 

இந்த நிலையில் தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக ரமணியின் தந்தை கருப்புசாமி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டு, போலீசார், வருவாய் கோட்டாட்சியர் சஞ்சய் மற்றும் அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். 

அதில், சஞ்சய் ரமணியின் கழுத்தை நெறித்து கொலை செய்ததும், அதை மறைப்பதற்காக சஞ்சயும் அவரது பொற்றோரும் சேர்ந்து நாடகமாடியது விசாரணையில் தெரிய வந்தது. 

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார், ரமணியின் கணவர் சஞ்சய், மாமியார் பக்ருநிஷா, மாமனார் லட்சுமணன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற காவலில் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 

காதல் திருமணம் செய்த சில நாள்களிலேயே இளம் பெண்ணை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT