தமிழ்நாடு

ரயில் பயணிகள் கவனத்திற்கு... சென்னை கடற்கரை-சேப்பாக்கம் இடையே ரயில் சேவை 2024 ஜனவரி 31 வரை ரத்து!

DIN

சென்னை: 4 ஆவது ரயில்பாதை வழித்தடத்தில் பணிகள் நடைபெறுவதால் சென்னை கடற்கரை முதல் சேப்பாக்கம் செல்லும் அனைத்து மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் ரயில் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில், கடற்கரை - எழும்பூர் இடையே 4 ஆவது ரயில்பாதை அமைக்கப்பட உள்ளது. சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4 ஆவது ரயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.96.70 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து இந்த திட்டத்தை வேகமாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், 4 ஆவது ரயில்பாதை வழித்தடத்தில் பணிகள் நடைபெறுவதால் சென்னை கடற்கரை முதல் சேப்பாக்கம் வரை செல்லும் அனைத்து மின்சார ரயில்களும் வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு 2024 ஜனவரி 31 ஆம் தேதி வரை 7 மாதங்களுக்கு ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 

சேப்பாக்கத்தில் இருந்து வேளச்சேரி வரை மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துறையூர் அருகே இரட்டைக் கொலை: சிறு தகவல் கொடுத்தாலும் சன்மானம்

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

SCROLL FOR NEXT