சென்னை வந்தடைந்த தில்லி முதல்வர் கேஜரிவால் ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் நேரில் சந்தித்தார்.
இந்த சந்திப்பில் அரவிந்த் கேஜரிவாலுடன் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்டோரும் உள்ளனர். அதிகாரிகள் நியமனத்தில் மத்திய அரசின் அவசர சட்டம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.
தில்லி மாநில அரசின் நிா்வாக அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் மத்திய அரசால் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதற்கு எதிராக குரல் கொடுக்குமாறு பிற மாநில முதல்வா்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவா்களை அரவிந்த் கேஜரிவால் சந்தித்து வலியுறுத்தி வருகிறாா்.
பிகாா் முதல்வா் நிதீஷ்குமாா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோரை ஏற்கெனவே அவா் சந்தித்துள்ளாா். அதைத் தொடா்ந்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்துள்ளார்.
இதையும் படிக்க: சென்னை சிபிசிஐடி அலுவலகக் கட்டடத்தில் திடீர் தீ விபத்து!
இந்த சந்திப்பின்போது டி.ஆர்.பாலு, கனிமொழி, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் உடன் உள்ளனர்.