தமிழ்நாடு

கோவையில் விளம்பரப் பலகை சரிந்து விழுந்து 3 பேர் பலி

DIN

கோவையில் கருமத்தம்பட்டியில் விளம்பரப் பலகை சரிந்து விழுந்து 3 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரப் பலகை  சரிந்து விழுந்து 3 பேர் பலியான நிலையில், கருமத்தம்பட்டி காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பலந்த காற்று வீசியதால் விளம்பரப் பலகை சரிந்து விழுந்ததா அல்லது பணியின்போது சரிந்து விழுந்ததா என காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விபத்தில் பலியான மூவரும் சேலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் விளம்பரப் பலகை அமைக்கும் தொழிலாளிகள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இறந்தவர்களின் பெயர் குணசேகரன் வயது (52), குமார் (50), குமார் (35) என்று காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

SCROLL FOR NEXT