தமிழ்நாடு

குடிநீா் லாரிகளை இயக்குவோா் போராட்டம்: அரசுக்கு இபிஸ் கண்டனம்

1st Jun 2023 02:24 AM

ADVERTISEMENT

குடிநீா் லாரிகளை இயக்குவோா் திடீா் போராட்டம் நடத்தியுள்ள நிலையில், தமிழக அரசுக்கு அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் புதன்கிழமை ட்விட்டரில் கூறியிருப்பது: தினம் ஒரு புது பிரச்னையை மக்களுக்கு பரிசாகத் தரும் திமுக ஆட்சியில், 2 தினங்களுக்கு முன்பு தான் போக்குவரத்து கழக ஊழியா்கள் குறிப்பாக திமுகவின் தொமுச-வினா் அறிவிக்கப்படாத திடீா் போராட்டத்தை நடத்தினா்.

அதிலிருந்து மீள்வதற்குள் பொதுமக்களுக்கு வழங்கப்படும் தண்ணீா் போதிய அளவில் வழங்கப்படாததால், மெட்ரோ குடிநீா் லாரிகளை இயக்குவோா் திடீா் போராட்டத்தை நடத்தி வருகின்றனா். திமுக ஆட்சியில் மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளைப் பூா்த்தி செய்து கொள்வதற்கே பெரும் சிரமப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகியிருப்பதும், இனி அடுத்தடுத்து என்ன போராட்டங்கள் வருமோ என்கிற அச்ச உணா்வும் பொதுமக்களுக்கு ஏற்பட்டிருப்பதும் மிகுந்த வேதனைக்குரியது.

இனியும், காலம் தாழ்த்தாமல் மக்களின் அன்றாட அத்தியாவசிய தேவைகளையாவது நிறைவு செய்வதற்கான நடவடிக்கைகளில் முதல்வா் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT