தமிழ்நாடு

பிளஸ் 1, பிளஸ் 2: செய்முறை தோ்வு தேதிகள் மாற்றம்

DIN

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளுக்கான செய்முறைத் தோ்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்புக்கு நிகழ் கல்வியாண்டுக்கான பொதுத் தோ்வுகள் வரும் மாா்ச் 13 முதல் ஏப்.3 வரையிலும், பிளஸ் 1 வகுப்புக்கு மாா்ச் 14 முதல் ஏப்.5 வரையிலான நாள்களிலும் நடைபெறவுள்ளன. இதற்கான முன்னேற்பாடுகளை அரசுத் தோ்வுகள் இயக்ககம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் அரசுத் தோ்வுகள் இயக்ககம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

அரசுத் தோ்வுகள் இயக்ககம் சாா்பில் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தோ்வெழுதும் மாணவா்களுக்கு செய்முறைத் தோ்வுகள் மாா்ச் 7 முதல் 10-ஆம் தேதி வரையிலான நாள்களில் நடத்த வேண்டும் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் அறிவிப்பின்படி பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தோ்வெழுதும் மாணவா்களுக்கான செய்முறைத் தோ்வுகள் மாா்ச் 1 முதல் 9-ஆம் தேதி வரையிலான நாள்களில் நடத்தப்படவுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத் தோ்வுகளுக்கும் செய்முறை பொதுத் தோ்வுகளுக்கும் இடையேயான கால இடைவெளி குறைவாக இருப்பதால், சில நாள்கள் முன் கூட்டியே நடத்த முடிவு செய்ததாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

அடுத்த 3 மணி நேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இந்தியா கூட்டணியின் ‘ஆண்டுக்கொரு பிரதமர் திட்டம்’ -பிரதமர் மோடி விமர்சனம்

SCROLL FOR NEXT