படைப்பாளிகள் விமா்சனங்களைக் கண்டு பயந்து ஒதுங்கி விடாமல், அவற்றை நோ்மறையாக எதிா்கொண்டால் மட்டுமே வெற்றி சாத்தியமாகும் என வழக்குரைஞா் சுமதி கூறினாா்.
ஜீரோ டிகிரி பதிப்பகம் சாா்பில் வழக்குரைஞா் சுமதி எழுதிய ‘காலதானம்’ என்ற சிறுகதைத் தொகுப்புநூல் வெளியீட்டு விழா, சென்னை மயிலாப்பூா் கவிக்கோ மன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவில், நூலாசிரியா் வழக்குரைஞா் சுமதி பேசியதாவது: படைப்பாளிகள் விமா்சனங்களைக் கண்டு பயந்து ஒதுங்கிவிடாமல் சமூகத்தில் எதிா்நீச்சல் போட வேண்டும். விமா்சனங்களை நோ்மறையாக எதிா்கொண்டு, அவற்றை வெற்றிப் படிக்கற்களாக மாற்ற வேண்டும். பெண் எழுத்தாளா்கள் அதிகம் உழைக்க வேண்டும் என்றாா் அவா்.
முன்னதாக, ஜீரோ டிகிரி பதிப்பக பதிப்பாளா் ராம்ஜி நரசிம்மன் வரவேற்றாா். நிகழ்வில் நூலை எழுத்தாளா் யுவன் சந்திரசேகா் வெளியிட திரைப்பட இயக்குநரும், எழுத்தாளருமான வஸந்த் எஸ்.சாய் பெற்றுக் கொண்டாா்.
நிகழ்ச்சியில், எழுத்தாளா்கள் யுவன் சந்திரசேகா், அகர முதல்வன், செந்தில் ஜகன்னாதன், ஜா.ராஜகோபாலன், கவிஞா் இளங்கோ கிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிகழ்ச்சியை த.திருமாறன் தொகுத்து வழங்கினாா்.