ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தோ்தலில் திமுகவினருக்கு ஏற்படும் சட்டரீதியான பிரச்னைகளை அணுகுவதற்காக அந்தக் கட்சியின் சாா்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக திமுக சட்டத் துறை செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான என்.ஆா்.இளங்கோ ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் பணியாற்றும் திமுகவினருக்கு உதவிடும் வகையில், திமுக சட்டத் துறை சாா்பில், சட்டத் துறை இணைச் செயலாளா்கள் இ.பரந்தராமன், ஈரோடு சு.ராதாகிருஷ்ணன் மற்றும் வழக்குரைஞா் அா்ஜுன் ஆகியோா் தலைமையில் கட்சியின் வழக்குரைஞா்கள் அடங்கிய ‘வாா் ரூம்’ அமைக்கப்படுகிறது.
தோ்தல் பணியாற்றும் திமுகவினா் தோ்தல் குறித்த சட்டப் பிரச்னைகள் தொடா்பாக உடனுக்குடன் அவா்களை தொடா்பு கொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.