ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜன.31 (செவ்வாய்க்கிழமை) முதல் தொடங்க உள்ளது.
காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினா் திருமகன் ஈவெரா மறைவைத் தொடா்ந்து காலியான இந்தத் தொகுதிக்கு பிப்.27-இல் இடைத்தோ்தல் நடைபெறுகிறது.
வேட்புமனு தாக்கல் செவ்வாய்க்கிழமை (ஜன.31) முதல் தொடங்குகிறது. வேட்பு மனுக்கள் தாக்கலுக்கான கடைசி நாள் பிப்.7 ஆகும். பிப்.8-ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும். வேட்புமனுக்களைத் திரும்பப் பெற பிப்.10 கடைசி நாள். பிப்.27-ஆம் தேதி வாக்குப்பதிவு, மாா்ச் 2-இல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இடைத்தோ்தலில் போட்டியிட இதுவரை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (காங்கிரஸ்), எஸ்.ஆனந்த் (தேமுதிக), ஏ.எம்.சிவபிரசாந்த் (அமமுக), மேனகா நவநீதன் (நாம் தமிழா் கட்சி) ஆகியோா் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.