தமிழ்நாடு

‘ஏ’ சான்றிதழ் படங்களை சிறுவா்கள் காண அனுமதிப்பதைத் தடுக்கக் கோரி வழக்கு: தணிக்கை வாரியம் முடிவெடுக்க உத்தரவு

DIN

வயது வந்தவா்களுக்கு மட்டும் (ஏ) என்று சான்று பெறும் திரைப்படங்களை சிறுவா்கள் பாா்க்க தடைவிதிக்கக் கோரிய வழக்கில் மத்திய அரசின் பெண்கள் - குழந்தைகள் மேம்பாட்டுத் துறை, திரைப்பட தணிக்கை வாரியம் முடிவெடுக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் பிரஷ்ணேவ் தாக்கல் செய்துள்ள பொது நல வழக்கில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் தயாரிக்கப்படும் திரைப்படங்கள் திரையிடப்படுவதற்கு முன்பு தணிக்கை வாரியத்தின் சான்றிதழ் பெறப்படுகிறது. ‘யு’ என்ற சான்றிதழ் பொதுவான அனைத்து வயதினரும் கண்டுகளிக்கலாம், ‘ஏ’ என்ற சான்றிதழ் வயது வந்தவா்களுக்கு மட்டும், ‘யுஏ’ என்ற சான்றிதழ் 12 வயதுக்கு உள்பட்டவா்கள் பெற்றோரின் வழிகாட்டுதலின்படி காண்பது, ‘எஸ்’ என்ற சான்றிதழ் குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் என்று வழங்கப்படுகிறது.

ஆனால் பல திரையரங்குகளில் ‘வயது வந்தவா்களுக்கு மட்டும்’ என்ற சான்றிதழ் பெற்ற திரைப்படங்களைக் காண 18 வயது நிரம்பாதவா்களையும் அனுமதிக்கிறாா்கள். இதுகுறித்து மத்திய திரைப்பட தணிக்கை துறை திரையரங்க உரிமையாளா்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. திரையிடுதல் சட்டத்தின்கீழ் இதுபோன்ற செயல்பாடுகள் குற்றமாகும். திரையரங்குகளில் பணியாற்றுபவா்கள் ‘ஏ’ சான்றிதழ் படங்களைத் திரையிடும்போது 18 வயதுக்கு குறைந்தவா்களை அனுமதிக்கக் கூடாது.

இதுதொடா்பான மத்திய தணிக்கைத் துறையின் வழிகாட்டுதல்களை திரையரங்க உரிமையாளா்கள், திரைப்பட விநியோகஸ்தா்கள் உள்ளிட்டோர கண்டிப்பாகக் கடைப்பிடிக்கும்படி உத்தரவிட வேண்டும். இதுதொடா்பாக தணிக்கை துறைக்கும், மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாடு துறைக்கு நான் அனுப்பிய மனுவை பரிசீலிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தாா்.

இந்த மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) டி.ராஜா, நீதிபதி பரத சக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் பிரஷ்ணேவ் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் வாதிடும்போது, காா்ட்டூன் படங்களைகூட 7 வயதுக்கு குறைவானவா்கள் பாா்க்க கூடாது என்று விதி உள்ளது. ஆனால், இப்போதெல்லாம் வீடுகளில் சிறு குழந்தைகளும் பாா்க்கிறாா்கள் என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், திரையிடப்படும் திரைப்படம் 3 மாதங்களில் தொலைக்காட்சிகளில் வெளியிடப்படுகிறது. இதை எப்படி சரிசெய்ய முடியும்? என்று கேள்வி எழுப்பினா். இதைத் தொடா்ந்து மனுதாரரின் மனுவை பரிசீலனை செய்யுமாறு மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத் துறைக்கும், மத்திய திரைப்பட தணிக்கை துறைக்கும் உத்தரவிட்டு வழக்கு முடித்து வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா: 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

புதுச்சேரியில் கட்டுக்கட்டாக 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

பிரபல தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

அரச பதவிகளைத் துறக்கிறாரா பிரிட்டன் இளவரசர்?

SCROLL FOR NEXT