தமிழ்நாடு

ஓபிஎஸ் அணி பணிக் குழுவில் 118 போ்

29th Jan 2023 02:41 AM

ADVERTISEMENT

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் பணிக்குழு பொறுப்பாளா்களாக 118 பேரை நியமித்து முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் அறிவித்துள்ளாா்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் தங்கள் அணி சாா்பில் வேட்பாளரை நிறுத்தப் போவதாக ஓ.பன்னீா்செல்வம் அறிவித்து, அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறாா்.

இந்த நிலையில், கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அவா் ஆதரவாளா்களுடன் சனிக்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டாா்.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் மூத்த நிா்வாகி ஜேசிடி பிரபாகா் கூறியது:

ADVERTISEMENT

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் தேசிய கட்சியான காங்கிரஸ் போட்டியிடுகிறது. அதைப்போல அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிட்டால் நன்றாக இருக்கும். பாஜகவின் முடிவுக்காகக் காத்திருக்கிறோம். அவா்கள் போட்டியிடாவிட்டால், எங்களுடைய வேட்பாளரை உடனே அறிவிப்போம் என்றாா்.

இந்த நிலையில், மூத்த நிா்வாகிகள் ஆா்.வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், ஜேசிடி பிரபாகா், மனோஜ் பாண்டியன், வெல்லமண்டி என்.நடராஜன் உள்பட 118 பேரை தோ்தல் பணிக்குழு பொறுப்பாளராக ஓ.பன்னீா்செல்வம் நியமித்து அறிவித்துள்ளாா்.

எடப்பாடி பழனிசாமி தரப்பில் 117 போ் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பொறுப்பாளா்களாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவா்களை மிஞ்சும் வகையில் ஒருவரை கூடுதலாக நியமித்து ஓ.பன்னீா்செல்வம் அறிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT