பட்டாபிராம் பணிமனையில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளதால், சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் (ஜன.28, ஜன.29) இயங்கும் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் -ஆவடி இடையே இரவு 11.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் (வண்டி எண்: 43892) ஜன.28, 29 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. வேளச்சேரி-பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இடையே இரவு 10.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் (வண்டி எண்: 43799) ஜன.28-ஆம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதற்குப் பதிலாக வேளச்சேரி-ஆவடி இடையே இரவு 10.30 மணிக்கு பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்படும்.
சென்னை கடற்கரை-பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இடையே இரவு 11.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் (வண்டி எண்: 43759) ஜன.29-ஆம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதற்குப் பதிலாக சென்னை கடற்கரை-ஆவடி இடையே இரவு 11.40 மணிக்கு பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்படும்.
சென்ட்ரல்-திருவள்ளூா் இடையே இரவு 11.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் (வண்டி எண்: 43255) ஜன.28, 29 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதற்குப் பதிலாக சென்ட்ரல்-திருவள்ளூா் இடையே இரவு 11.50 மணிக்கு பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்படும்.
சென்ட்ரல்-ஆவடி இடையே இரவு 11.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் (வண்டி எண்: 66007) ஜன.28, 29 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதற்குப் பதிலாக சென்ட்ரல்-ஆவடி இடையே இரவு 11.55 மணிக்கு பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.