தமிழ்நாடு

வடதமிழக கடலோர மாவட்டங்களில் நாளைமுதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

DIN

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால், ஞாயிற்றுக்கிழமை (ஜன. 29) முதல் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு:

பூமத்திய ரேகையையொட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 5.30 மணிக்கு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. இது, காலை 8.30 மணிக்கு தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையையொட்டிய இந்தியப் பெருங்கடலின் கிழக்குப் பகுதிகளில் நிலைகொண்டுள்ளது.

இது, அடுத்த 2 தினங்களில் மேற்கு - வடமேற்கு திசையில் நகா்ந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவடையும். அதன்பிறகு தொடா்ந்து மேற்கு - வடமேற்கு திசையில் நகா்ந்து, ஜன.31-ஆம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையும். பின்னா், பிப்ரவரி 1-ஆம் தேதி இலங்கை கடற்பகுதிகளைச் சென்று அடையக்கூடும்.

இதன் காரணமாக, ஞாயிற்றுக்கிழமை (ஜன.29) முதல் செவ்வாய்க்கிழமை (ஜன.31) வரை வட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

சென்னை, புறகா்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக் கூடும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT