தமிழ்நாடு

சமயபுரம் மாரியம்மன் கோயில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

DIN

மண்ணச்சநல்லூர்: சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் வியாழக்கிழமை தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் சமயபுரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில். சக்தி ஸ்தலங்களில் முதன்மையாக விளங்கும் இத்திருக்கோயிலில் தைப்பூச திருவிழா பிரசித்தி பெற்றது.

தைப்பூச திருவிழாவிற்கான கொடியேற்றம் நடைபெற்றது. உற்சவ அம்பாள் கேடயத்தில் புறப்பாடாகி கொடிமரத்திற்கு முன்பு எழுந்தருளினார்.

தொடர்ந்து கொடிமரத்திற்கு பால், சந்தனம் , உள்ளிட்ட அபிஷேக பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளுக்கு பிறகு கொடிமரத்தில் பக்தி பரவசத்துடன் கொடி யேற்றப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா நடைபெறும்.

பிப். 3ம் தேதி தெப்பத் திருவிழாவும், பிப். 4ம் தேதி திருக்கோயிலிருந்து அம்மன் கண்ணாடி பல்லக்கில் புறப்பாடும், தொடர்ந்து இரவு வடதிருக்காவேரி கரையில் அரங்கநாதரிடமிருந்து சீர்பெறும் நிகழ்வும், பிப்.5 ம் தேதி மஹா அபிஷேகத்துடன் வழி நடை உபயங்களை கண்டருளிகிறார்.

இந்நிகழ்வில் திருக்கோயில் இணை ஆணையர் சி.கல்யாணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

துறையூர் அருகே இரட்டைக் கொலை: சிறு தகவல் கொடுத்தாலும் சன்மானம்

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

SCROLL FOR NEXT