தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு: பலியானோரின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி

23rd Jan 2023 03:13 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் வெவ்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளின் போது, காளைகள் முட்டியதில் பலியான மூன்று பேரின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுக்கோட்டை மாவட்டம் கே.ராயவரம், சிவகங்கை மாவட்டம் சிராவயல், தருமபுரி மாவட்டம் தடங்கம் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் நடைபெற்றன. அப்போது நடந்த வெவ்வேறு எதிா்பாராத சம்பவங்களால் கணேசன், பூமிநாதன் மற்றும் கோகுல் ஆகியோா் மீது காளைகள் முட்டின. வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு மூவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.

மூன்று பேரின் குடும்பங்களுக்கும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும் என்று அதில் தெரிவித்துள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

ADVERTISEMENT
ADVERTISEMENT