சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை சந்திப்பில் சனிக்கிழமை இரவு பொது மக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொண்டாட்டத்தின் போது பெரும் அசாம்பாவிதங்களைத் தவிா்க்க சென்னை காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து, நட்சத்திர விடுதிகளில் இரவு 1 மணி வரை கொண்டாட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
புத்தாண்டு பிறப்பதற்கு முன்னரே சென்னை மெரினா கடற்கரை சாலையில் அங்கு கூடி இருந்த மக்களை காவல்துறை கலைந்துசெல்லுமாறு திருப்பி அனுப்பினர்.
இதையும் படிக்க: தேவலாயங்களில் சிறப்பு திருப்பலிகள்: இடையூறு செய்த இளைஞர்களுக்கு தடியடி!
கரோனா பாதுகாப்பு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.