வாணியம்பாடி அருகே கார் மோதியதில் சைக்கிளில் சென்ற பள்ளி மாணவர்கள் 3 பேர் பலியாகியுள்ளனர்.
வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடந்தது. இதில், சம்பவ இடத்திலேயே மூன்று பள்ளி மாணவர்கள் பலியாகியுள்ளனர்.
பள்ளிக்கு சைக்கிளில் சென்ற மாணவர்கள் மீது அதிவேகமாக வந்த கார் மோதி கிரிசமுத்திரம் அரசுப்பள்ளி மாணவர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.
இதையும் படிக்க: எனக்கு நானே இலக்கு: முதல்வர் மு.க. ஸ்டாலின்
வாணியம்பாடி அடுத்த சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்ற கார் நிலைத்தடுமாறி தேசிய நெடுஞ்சாலையில் பள்ளிக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவர்கள் ரபீக் (13), சூர்யா (11), விஜய் (13) ஆகிய அரசுப் பள்ளி மாணவர்கள் மீது மோதிய விபத்தில் விபத்து ஏற்பட்டது.