தமிழக பட்ஜெட் மார்ச் 20-ல் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்று சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு செய்தியாளர்களிடம் தெரிவித்திருப்பதாவது:
2023-24 ஆம் ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கை மார்ச் 20-ல் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும். மார்ச் 20 ஆம் தேதி மாலை நடைபெறும் அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் பேரவை செயல்படும் நாள்கள் குறித்து முடிவு செய்யப்படும்.
அதிமுகவினருக்கான இருக்கை விவகாரத்தில் பழைய நடைமுறையே தொடரும் என்று சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தலைவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: ஆண்டவன் உத்தரவு: சிவன்மலை முருகன் கோயிலில் வேல் வைத்துப் பூஜை
தமிழக நிதிநிலை அறிக்கைக்கு மார்ச் 9 ஆம் தேதி நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.