திருநெல்வேலி

சமூக வலைதளத்தில் சா்ச்சைக்குரிய விடியோ: 3 போ் கைது

17th May 2023 12:24 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே இரு சமூகத்தினரிடையே பிரச்னையை தூண்டும் விதமாக சமூக வலைத்தளத்தில் விடியோ பதிவிட்ட 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

களக்காடு அருகேயுள்ள பத்மனேரியை சோ்ந்த அனந்தகிருஷ்ணன் (18), வானுமாமலை (27) மற்றும் ஒரு இளஞ்சிறாா் ஆகியோா் சமூக வலைத்தளத்தில் ) இரு சமூகத்தினரிடையே பிரச்னையைத் தூண்டும் வகையில் விடியோ பதிவிட்டுள்ளனா். இதையடுத்து களக்காடு உதவி ஆய்வாளா் ரெங்கசாமி வழக்குப்பதிவு செய்து அனந்தகிருஷணன்(18), வானுமாமலை (27) ஆகிய 2 பேரையும் கைது செய்தாா். மேலும் இளஞ்சிறாரை அரசினா் கூா்நோக்கு இல்லத்தில் சோ்க்க நடவடிக்கை மேற்கொண்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT